News August 23, 2024

தரம் உயர்த்தப்பட்ட நேரு விளையாட்டரங்கம் திறப்பு

image

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த மைதானத்தை நேற்று இரவு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் இந்த மையதானம் தமிழ்நாட்டில் இருந்து தலைசிறந்த கால்பந்து வீரர் – வீராங்கனையரை உருவாக்கட்டும், அதற்கு எந்நாளும் துணை நிற்போம் என்று கூறினார்.

Similar News

News September 18, 2025

காவல் ஆணையரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

image

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், காவல் ஆணையரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் துணை ஆணையாளர் G. சுப்புலட்சுமி தலைமையேற்றார். நிகழ்வில் V. V. கீதாஞ்சலி (மத்திய குற்றப்பிரிவு-II), உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

News September 18, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

வார இறுதி நாள் முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

image

21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு 20ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது கோயம்பேட்டில் இருந்து 19, 20ம் தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாள்களை முன்னிட்டு 1,055 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

error: Content is protected !!