News May 17, 2024

தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

image

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல இடங்களில், கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கோவைக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், அவ்வாறு நடந்தால், என்னென்ன மீட்பு பணிகளை மேற்கொள்ளுவது என தயார் நிலையில் உள்ள மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளதாக இன்று தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 21, 2025

கோவை: பட்டா மாற்றம், திருத்தம் ஆன்லைனில்!

image

கோவை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>https://eservices.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையதளம் தமிழகத்தில் உள்ள நிலம் தொடர்பான விவரங்களை வழங்குகிறது. இதில் பொதுமக்கள் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்றவற்றிற்கு, இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 21, 2025

கோவையில் 56 டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க ஆளில்லை

image

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 92 டாஸ்மாக் பார்களுக்கான ஏல விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வு, மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், மாவட்ட அளவில் உள்ள 92 பார்களில், 36 பார்களுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 பார்களுக்கு யாரும் ஏலம் எடுக்க விண்ணப்பிக்கவில்லை.

News August 21, 2025

கோவையில் அண்ணா, பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

image

பேரறிஞர் அண்ணா, பெரியார் ஈ.வி.ரா பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 26, 28, கோவையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் ஆகஸ்ட் 25-க்கு முன் மாநில கல்வி அலுவலர்களுக்கு, கல்லூரி முதல்வர்களுக்கு மாணவர்களின் பெயர்கள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!