News August 27, 2024

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்

image

அறந்தாங்கி கண்டிச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமுருகையா (65). இவரது சகோதரர் சிவரத்தினம் (52). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று சிவமுருகையா பொது இடத்தை உழுததை கண்ட சிவரத்தினம் தடுத்துள்ளார். அப்போது, சிவமுருகையா, அவரது மருமகன் பசுபதி ஆகிய இருவரும் சேர்ந்து சிவரத்தினத்தை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 6, 2025

புதுகை: திருடு போன தெரு விளக்கு இரும்பு குழாய்கள் மீட்பு

image

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் ஊராட்சியில், எல்.இ.டி தெரு விளக்குகளை பொருத்துவதற்கான, 800-க்கும் மேற்பட்ட, ‘எல்’ வடிவ வளைவு இரும்பு குழாய்களை திருடி, பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயசுதா தலைமையில் அலுவலர்கள் அந்த இரும்பு கடையில் ஆய்வு செய்து அங்கு இருந்த இரும்பு குழாய்களை மீட்டனர்.

News December 6, 2025

புதுகை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை ஷேர் பண்ணுங்க…

News December 6, 2025

புதுக்கோட்டையில் விருது பெற வாய்ப்பு!

image

புதுகை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தயாரிப்புகள், பசுமை தொழில் ஆராய்ச்சி&அறிவியல் ஆய்வுகள், நீர் நிலைகள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல், மறு சுழற்சி செய்தல், கடலோர பாதுகாப்பு போன்ற திட்டங்களை மேற்கொண்டதற்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற www.tnpcb.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!