News March 25, 2024
தம்பியை அடித்து கொலை- அண்ணன் கைது

கீழையூரை அடுத்த ஈசனூர் கட்டளை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி(54). இவரது சகோதரரான சந்தியாகு(45). இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்த நிலையில், அந்த ஊரில் நடந்த துக்க நிகழ்வு இறுதி ஊர்வலத்தில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு சந்தியாகுவை, ஆரோக்கியசாமி மண்வெட்டி கொண்டு சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து ஆரோக்கியசாமியை போலீசார் கைது செய்தனர்
Similar News
News October 27, 2025
மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
News October 26, 2025
மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர்.
News October 26, 2025
நாகை: லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு திருமாளம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பாரதிராஜா(40). இவர் நேற்று பைக்கில் நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேதாரண்யம் சென்றுள்ளார். அப்போது திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த பாரதிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


