News December 18, 2025
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. ஆட்சி மொழி சட்டம் வரலாறு பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைமுறைகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் மாணவர்களுக்கு பட்டிமன்றம் ஒன்றியம் வட்ட அளவில் பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி மொழி சட்டம் குறித்து விளக்கக் கூடம் நடைபெறும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்
Similar News
News December 23, 2025
விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
விருதுநகர் பள்ளி மாணவிகள் சென்ற வாகனம் விபத்து

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அ.முக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரையாண்டு தேர்வு எழுதி மதியம் வீடு திரும்பிய 7 மாணவிகள் சென்ற ஆட்டோ, நரிக்குடி–திருப்புவனம் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 மாணவிகள் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 3 மாணவிகள் அ.முக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News December 23, 2025
சிவகாசி: கிராமம் தோறும் வருவாய் ஈட்ட அரிய வாய்ப்பு

சிவகாசி வட்டாரத்தில் ராபி பருவத்திற்கு சாகுபடி செய்துள்ள பயிர்கள் கணக்கெடுப்பு ஆண்டிராய்டு கைப்பேசி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனவே ஆண்டிராய்டு கைப்பேசி வைத்துள்ள உபயோகிக்க தெரிந்த விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், கணக்கெடுப்பு மேற்கொள்ளலாம். பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ரூ.3 வீதம் ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 995288896 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


