News December 20, 2025
தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற்ற 5,656 மாணவர்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.56.56 லட்சம் மதிப்பீட்டில் இதுவரை 5,656 மாணவர்கள் பயன் பெற்று வருவதாக இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Similar News
News December 22, 2025
ராணிப்பேட்டை: மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

வாலாஜா அடுத்த மேல் புதுப்பேட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (37) இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த சரத்குமார் நேற்று டிச.21 ல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வாலாஜா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
அரக்கோணம்: தெரு நாய்க்கடியால் இளைஞர் பரிதாப பலி!

அரக்கோணம், மோசூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் திவாகர் (19) இவர் +2 வரை படித்துவிட்டு வீட்டிலே இருந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. முறையான சிகிச்சை பெறாமல் இருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 21) திடீரென காய்ச்சல் அதிகமானது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, ரேபிஸ் நோய் தாக்கி இருப்பது தெரிந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
News December 22, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


