News December 22, 2024

தமிழ் திறனறி தேர்வில் சேலம் முதலிடம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த அக்.19இல் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு நடந்தது. அதில் சேலம் மாவட்டத்தில் 1,500 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில், மாவட்டத்தில் 157 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக ஓமலூர் அருகே குப்பூரில் செயல்படும் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 43 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இதன்மூலம் மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்தது.

Similar News

News September 3, 2025

சேலம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.

News September 3, 2025

சேலம்: முன் அனுமதி பெற வேண்டும் காவல் ஆணையாளர்!

image

சேலம் மாநகர எல்லைக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, பேரணி மேற்கொள்ளவோ, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ, குறிப்பிட்ட நாட்களுக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News September 3, 2025

சேலம் : இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகராட்சியில் 3.09.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

error: Content is protected !!