News April 4, 2025

தமிழ்நாட்டின் சந்தன மாநகர் எது தெரியுமா?

image

தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் சந்தன மரங்கள் காணப்பட்டாலும், தமிழ்நாட்டின் சந்தன மாநகராக திருப்பத்தூர் அறியப்படுகிறது.இங்குள்ள ஜவ்வாது மலைபகுதியில் அதிகளவில் சந்தன மரங்கள் காணப்படுகிறது.மேலும் ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய சந்தன கிடங்கும் இங்கு உள்ளது.இதனாலேயே திருப்பத்தூருக்கு சந்தன மாநகர் என்ற சிறப்பு பெயர் உள்ளது. திருப்பத்தூர் பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க..

Similar News

News April 5, 2025

12வது பாஸ் போதும், ரூ.71,900 வரை சம்பளம்

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் செயற்கை கைவினைஞர் பணியிடகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள். வயது வரம்பு: 18-32, கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Prosthetics and orthotics பிரிவில் 2 ஆண்டுகள் டிப்ளமோ. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 வரை. எழுத்துத் தேர்வு கிடையாது. <> இந்த லிங்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News April 5, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 5 ஆண்டுகள் சிறை

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கட்டட மேஸ்தி விஜயன் 54 என்பவரை ஆம்பூர் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய விஜயனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 4, 2025

திருப்பத்தூர்  இரவு ரோந்து போலிசார் விவரம் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 4 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்

error: Content is protected !!