News July 5, 2025
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் தோழர் ஆர். கலியமூர்த்தி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உடன் மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மாவட்டத் தலைவர் எம்.ஐ சகாபுதீன் கலந்து கொண்டனர் .
Similar News
News September 22, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.21 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
மரக்காணத்தில் UPSC ஊக்குவிப்புப் பயிற்சி முகாம்

இந்திய ஆட்சிப் பணி (UPSC) தேர்வர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட விழிப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர் குமரவேல் ஒருங்கிணைத்த இந்தப் பயிற்சி முகாமை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தொடங்கி வைத்துப் பேசினார். துணை கண்காணிப்பாளர் உமாதேவி, ஆய்வாளர் பரணிநாதன், பயிற்சியாளர் அழகு முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News September 21, 2025
இரா.லட்சுமணன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாமகவினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் சதீஷ் தலைமையில் 25 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.