News July 2, 2024
தமிழ்நாடு நாள் விழா; மாணவர்களுக்கு போட்டி

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து 6ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 9ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. விவரங்களுக்கு, வேலூரில் இயங்கும் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News May 7, 2025
ராணிப்பேட்டையில் மதுபோதையில் தகராறு

பள்ளூரில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது இங்கு நேற்று இரவு கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்த கோவர்தனன், பள்ளூரை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வராஜை கோவர்தனன் கை, கட்டையால் தாக்கினார். காயமடைந்த செல்வராஜ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து இன்று கோவர்த்தனனை கைது செய்தனர்
News May 7, 2025
ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மே-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News May 7, 2025
ராணிப்பேட்டை காவல் அதிகாரிகள் எண்கள்

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்(SP)விவேகானந்த சுக்லா – 9498100660, ADSP சரவணன் – 9840773352, ADSP குணசேகரன்- 9443417831, ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) இமயவரம்பன் – 9498230141, அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) ஜாபர் சித்திக்- 9650665056. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.