News December 31, 2025

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திண்டுக்கல் வருகை!

image

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கோயம்புத்தூர் செல்லும் வழியில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று வருகை தந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்களை நேரில் சந்தித்து மலர்கொத்துகள் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தார்.

Similar News

News February 1, 2026

திண்டுக்கல்லில் அதிரடி கைது!

image

திண்டுக்கல், கோவில்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ராக்காச்சிபுரம் பகுதியில் டூவிலரில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த சுமார் 1.120 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

News February 1, 2026

வத்தலகுண்டு: இறந்த கணவர் உடலுடன் வாழ்ந்த மனைவி

image

திண்டுக்கல், வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியை சேர்ந்து வழக்கறிஞர் ஜெயபாண்டி வயது 72,. இவரது மனைவி மஞ்சுளா தேவி வயது 66. இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசப்படுவதாகவும், வீடு பூட்டி உள்ளதாகவும் வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் வீட்டை திறந்து பார்த்த பொழுது, இறந்த கணவருடன் மஞ்சுளா தேவி இருந்துள்ளார். உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.

News February 1, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!