News November 25, 2025

தமிழ்த்தாய் பாடல் இல்லாமல் அரசு நிகழ்ச்சி: அண்ணாமலை

image

CM தலைமையில் நடைபெற்ற செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலேயே நிகழ்ச்சி தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழியைப் போற்றுவதற்காக அமைக்கப்படுவதாக திமுக கூறுவதுதான் இதில் நகைமுரண் என அண்ணாமலை சாடியுள்ளார். உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, பிரிவினைவாத அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

Similar News

News April 5, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம் !!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல்-(04) இரவு 10 மணி முதல் ஏப்ரல்- (05)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News April 5, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News April 5, 2026

காதலித்து திருமணம் செய்ய மறுத்தால் குற்றமல்ல: ஐகோர்ட்

image

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தெலங்கானா ஐகோர்ட் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, காதலித்த பிறகு திருமணத்தை மறுப்பது அனைத்து சூழல்களிலும் குற்றம் (அ) மோசடி எனும் பிரிவின் கீழ் வராது என நீதிபதி தெரிவித்துள்ளார். அது வெறும் வாக்குறுதி மீறல் மட்டுமே என்றும் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!