News October 18, 2024
தமிழ்த்தாய் சர்ச்சை: பிரசார் பாரதி தமிழ் பகிரங்க மன்னிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது ஏற்பட்ட குளறுபடிக்கு DD தமிழ் நிர்வாகமான பிரசார் பாரதி மன்னிப்பு கேட்டுக் கொண்டது. கவனக்குறைவால் இந்த தவறு நடந்துவிட்டதாகவும், தமிழையோ அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், வேண்டுமென்று யாரும் இதனை செய்யவில்லை எனவும், இது தொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் வருத்தம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 20, 2025
தமிழகத்தில் 7 மாதங்களில் 850 கொலை: சாடிய EPS

திமுக தேய்ந்து கொண்டிருப்பதால் வீட்டின் கதவை தட்டி உறுப்பினர்களை சேர்த்து வருவதாக EPS சாடியுள்ளார். ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 850 கொலைகள் நடந்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார். மேலும், தேர்தல் நெருங்குவதால் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்றார்.
News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டுக்கு புதிய சிக்கல்

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிகளை 1 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தவெக மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது, தொடர்பாக ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், மாநிலம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கொடிகள், பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
News August 20, 2025
PM, CM பதவி பறிப்பு மசோதா: ஸ்டாலின் கண்டனம்

30 நாள்கள் சிறையில் இருந்தால், PM, CM பதவியை பறிக்கும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு கருப்பு நாள், கருப்பு மசோதா என குறிப்பிட்ட அவர், இதுவே சர்வாதிகாரத்தின் தொடக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்கு திருட்டு விவகாரத்தை திசைதிருப்பவே இம்மசோதா கொண்டுவரப்பட்டதாகவும், ஜனநாயகத்தை அழிக்கும் மசோதா என்றும் தெரிவித்துள்ளார்.