News June 20, 2024

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம்

image

தமிழ்வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அரசாணைப்படி தமிழில் பெயர் பலகை அமைக்காத 10 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தமிழில் பெயர்ப்பலகை அமைக்கப்படவில்லை எனில் அந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அலுவலர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 6, 2026

தேனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

சின்னமனூர், அய்யம்பட்டியை சேர்ந்தவர் மணிபாரதி (27). இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்ட நிலையில் அதன் காரணமாக வலது கால் தொடைக்கு கீழ்ப்பகுதி அகற்றப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அப்பகுதியில் வலி அதிகரித்துள்ளது. இதனால் வலியின் வேதனையில் இருந்து வந்த மணிபாரதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் நேற்றூ வழக்குப்பதிவு செய்தனர்.

News February 5, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 5.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 5, 2026

தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!