News April 23, 2025

’தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் சிறை’

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15 வரை மட்டுமே அவகாசம். இல்லையென்றால் நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதமும், தொழிற்சாலைகளுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். எனவே அணைத்து கல்வி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள்சங்கங்கள் தமிழ் பெயா் பலகை நூறு சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தை தவிா்க்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 23, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல். 23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 23, 2025

வேலூர் அருகே பெண் தற்கொலை

image

வேலூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி ராஜகுமாரி (29). ராஜகுமாரிக்கு கடந்த சில மாதங்களாக தீராத நோயினால் பாதிக்கப்ட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு கொண்டார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 23, 2025

குழந்தை பாக்கியம் அருளும் ஜலகண்ட ஈஸ்வரி அம்மன்

image

வேலூர், மேல்வல்லத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் ஆலயம். இலகிய மலையின் மேல் அமைந்துள்ள அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் சிவபெருமான் கால்பதித்து லிங்கமாகக் காட்சி அருள்பாலிக்கிறார். திருமணமாகி வெகு நாள்களாகியும் குழந்தை இல்லாமல் ஏங்கும் பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டித் தொட்டில் கட்டி வழிபட சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!