News April 18, 2025

தமிழில் பெயர்ப்பலகை வைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், சங்கங்கள், உணவுக்கூடங்கள், கல்வி நிலையங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். அபராதத்தைத் தவிர்க்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 15, 2025

20 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கல்

image

மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ₹1,33,800 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News August 15, 2025

தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறையில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இவ்விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News August 15, 2025

மயிலாடுதுறை: சொந்த ஊரில் அரசு வேலை!

image

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ’33’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!