News July 3, 2024

தமிழக முதல்வர் தெரிவித்தது தவறு: இ.பி.எஸ்.

image

சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த அதிமுக அரசு முன்வரவில்லை என முதல்வர் தெரிவித்தது தவறு என இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாரயம் விவகாரத்தில், அரசின் அழுத்தம் காரணமாகவே ஆட்சியர் தவறான செய்தியை வெளியிட்டார். சிபிசிஐடி விசாரித்தால் உண்மை குற்றவாளி தப்பிவிடுவார். இதற்கு தீர்வு வேண்டும் என்றால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார்.

Similar News

News November 10, 2025

கொளத்தூர்: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

image

சேலம், கொளத்தூர் அருகே சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ (16) என்ற மாணவி, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பாட்டியின் கண்டிப்பால் மனமுடைந்தவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News November 9, 2025

வாழப்பாடி: 17 வயது சிறுமி காணாமல் போனதால் பரபரப்பு!

image

வாழப்பாடி: கொட்டவாடியை சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தும் உறிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் நேற்று கொட்டவாடியில் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏத்தாப்பூர் போலீசார் பேச்சு நடத்தி, சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உறுதி அளித்தனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்

error: Content is protected !!