News January 23, 2026
தமிழக முதல்வரிடம் எம்எல்ஏ ஈஸ்வரன் கோரிக்கை மனு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 25, 2026
நாமக்கல் : VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாமக்கல் மாவட்ட மக்கள் 04286281331 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 25, 2026
நாமக்கல்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

நாமக்கல் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <
News January 25, 2026
நாமகிரிப்பேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

நாமகிரிப்பேட்டை போலீசார் தொப்பப்பட்டி பகுதியில் நடத்திய ரோந்து பணியில், சட்டவிரோதமாக மது விற்ற ஜேடர்பாளையம் அழகேசன் மற்றும் பாபு ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 38 மதுபாட்டில்கள் மற்றும் 1,200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


