News April 8, 2025

தமிழக அரசின் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சுய உதவி குழு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவை ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகள் தகுதியானவர்கள் எனவும் மணிமேகலை விருது பெற வட்டார மையங்களில் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்து பயனடைய வேண்டுமென ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News April 17, 2025

நாளை வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க!

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் மறக்காம ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

புதுக்கோட்டை : ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய<> tnpsc.gov.in<<>> என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

News April 17, 2025

அமைச்சர் பொன்முடி மீது காவல் நிலையத்தில் புகார்

image

இந்து மதம் தொடர்பான வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சை கண்டித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கவிதா ஸ்ரீகாந்த்  தலைமையில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர்.

error: Content is protected !!