News December 11, 2025
தமிழகம் 100/100.. SIR படிவங்கள் பதிவேற்றம்

SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை டிச.14-ம் தேதி வரை EC நீட்டித்துள்ளது. இந்நிலையில், TN-ல் 100% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC அறிவித்துள்ளது. மொத்தம் 6.41 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவம் கொடுக்கப்பட்டதாகவும், பெரும்பாலானோர் படிவத்தை சமர்ப்பித்ததை தொடர்ந்து, விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC கூறியுள்ளது. இதையடுத்து டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
Similar News
News December 12, 2025
ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு முதல் பொதுத்தேர்தல் அறிவிப்பு

ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்ட வங்கதேசத்தில், 2026 பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதனுடன் அரசியல் சாசன திருத்தத்திற்கான பொது வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அந்நாட்டின் முக்கிய கட்சியான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிட முடியாது.
News December 12, 2025
கில்லை கேப்டனாக்கியது திடீர் முடிவு அல்ல: அங்கோலா

சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பது குறித்து திடீரென முடிவெடுக்கப்படவில்லை என்று EX பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் சலில் அங்கோலா தெரிவித்துள்ளார். ரோகித்துக்கு பிறகு சுப்மன் கில் தான் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் என்று 2023-ல் பிசிசிஐ உறுதி செய்ததாகவும், அந்த வருடம் அவர் மலைபோல் ரன்கள் குவித்து சிறப்பான ஃபார்மில் இருந்ததாகவும் அங்கோலா நினைவு கூர்ந்துள்ளார்.
News December 12, 2025
கோவா விவகாரத்தில் தோண்ட தோண்ட மோசடி

கோவாவில் 25 பேரின் உயிரை பறித்த <<18529860>>இரவு விடுதி<<>>யின் உரிமையாளர்கள் விரைவில் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு சொந்தமாக 42 நிறுவனங்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், அதில் பெரும்பாலானவை ஆவணங்களில் மட்டுமே உள்ளது. அதுவும் ஒரே முகவரியில் இணைக்கப்பட்டுள்ளது. இப்படி உருவாக்கப்படும் போலி நிறுவனங்கள் பெரும்பாலும் பினாமி பரிவர்த்தனை, பணமோசடிகளுக்கு பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


