News February 11, 2026
தமிழகம் முழுவதும் SIR பணிகள் முடிவடைந்தன!

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR பணிகளின் போது சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் டிச.19 முதல் இன்று (பிப்.10) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி SIR பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.
Similar News
News February 11, 2026
காதலனை கரம்பிடித்தார் நடிகை கீர்த்தி ❤️❤️

பிரபல தமிழ் சீரியல் நடிகை கீர்த்திக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இன்ஸ்டாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி, தனது நீண்டகால காதலர் சாய் க்ரிஷை கரம் பிடித்துள்ளார். இந்த காதல் திருமணத்துக்கு கிர்த்தி ரசிகர்கள் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
News February 11, 2026
நாளை முதல் பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கும்!

அரசு நிகழ்ச்சிகளில் <<19107777>>வந்தே மாதரம்<<>> பாடலை இசைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிகளில் அன்றாட வகுப்புகளை தொடங்குவதற்கு முன், இப்பாடலை கூட்டுப் பாடலாக பாடி மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இப்புதிய அறிவிப்பால், நாளை முதல் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை பாட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
News February 11, 2026
ஆபிஸில் சீக்ரெட்டை ஷேர் பண்றீங்களா?

ஆபிஸில் சக ஊழியர்களிடம் சீக்ரெட்களை பகிர்வது சரியானது அல்ல என சைக்காலஜிஸ்டுகள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, பர்சனல் லைஃப், நிதி நிலை குறித்து பேசவே கூடாதாம். இதற்கு சில காரணங்களும் சொல்கிறார்கள். சம்பளம் குறித்து பேசுவது பொறாமைக்கு வழிவகுக்கலாம். பர்சனல் விஷயங்களை பகிர்ந்தால், ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் பிரிய, நம்மை குறித்த சீக்ரெட் வெளியாகிவிடுமோ என்ற தேவையற்ற பதற்றத்தை கொடுக்கும். உஷாரா இருங்க!


