News March 2, 2026

தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கில் தீர்ப்பு!

image

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் வரும் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை கோர்ட் அறிவித்துள்ளது. கடந்த 2020-ல் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைதான நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வர உள்ளது.

Similar News

News March 4, 2026

மறந்துக்கூட வீட்டில் லட்சுமி படத்தை இங்க வெச்சுராதீங்க!

image

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் லட்சுமியின் படம் அல்லது விக்கிரகத்தை வடக்கு திசையில் இருந்து தெற்கு பார்த்தபடி வைக்க வேண்டுமாம். அதுவே, மங்களகரமானது என சொல்லப்படுகிறது. இதுதவிர, தாமரை மலரில் இருக்கும் லட்சுமி படத்தை இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கை உள்ளது. தவறுதலாக கூட வடக்கு பார்த்தபடி வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

News March 4, 2026

சிக்கலில் நவாஸ் கனி MP

image

2019 & 2024 MP தேர்தல்களின் போது நவாஸ் கனி, தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஒப்பிட்டதில் அவர் வருமானத்தை மறைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கின் விசாரணையில், ₹18 கோடி அளவுக்கு வித்தியாசம் இருப்பதாகவும், ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகவும் சென்னை HC கூறியது. அவரது வருமான விவரங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்ட நிலையில், ஆதாரங்களின்படி நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுப்பதாக IT உறுதியளித்தது.

News March 4, 2026

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்.,?

image

திமுக – காங்., கூட்டணியை உறுதிப்படுத்த இறுதியாக ப.சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 40+ கேட்ட தொகுதிகளை கேட்ட காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டதாம். இதனால், வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்., விலக அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!