News November 30, 2025

தமிழகத்தில் 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை

image

2024 – 2025 கல்வியாண்டில் 3.51 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் +2 பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 3.23 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், இவர்களில் 16,929 மாணவர்கள் உயர்கல்வியில் சேரவில்லையாம். இதனால், அந்தந்த பள்ளி மேலாண்மை குழு உதவியுடன், உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து காரணங்களை அறிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

Similar News

News December 5, 2025

பெரம்பலூர் எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் அழைப்பு

image

அரியலூர் மாவட்ட திமுக சார்பாக அரியலூரில் புதிய கலைஞர் அறிவாலயம் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று (05-12-2025) நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை நேற்று பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் அமைச்சர் சிவசங்கர் வழங்கி அழைப்பு விடுத்தார்.

News December 5, 2025

டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்பை கொண்ட நாடுகள்

image

World of Statistics-ன் புதிய தரவரிசை, 2025-ம் ஆண்டில் உலகின் டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்புகள் பெயரிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் உச்சரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாட்டு மக்கள் பேசுவது பிறரை ரசிக்க வைக்குமாம். அவை எந்தெந்த நாடுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 5, 2025

BREAKING: விஜய் எடுத்த புதிய முடிவு

image

புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், உப்பளம் மைதானத்தில் வரும் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த விஜய் தரப்பு அனுமதி கேட்டுள்ளது. உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மேடை எங்கே அமைக்கப்படுகிறது. நேர விபரம், எத்தனை பேர் பங்கேற்பார்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை காவல்துறை கேட்டுள்ளது. இதனை தயார் செய்யும் பணிகளில் தவெகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!