News October 19, 2024

தமிழகத்தில் முதல்முறையாக கோவையில்

image

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை உக்கடம் குளத்தில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 154 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும். அதிகாரிகள் கூறுகையில், தண்ணீரில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின்சாரம் எடுக்கும் பணி தமிழகத்திலே கோவையில் தான் முதல் முறை. எக்காரணத்தை கொண்டும் தண்ணீரில் மூழ்காது. காற்று, மழையால் எவ்வித பாதிப்பு ஏற்படாது என்றனர்.

Similar News

News April 29, 2025

ரயில்வேயில் உடனடி வேலை வாய்ப்பு

image

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 29, 2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நீதிபதி மாற்றம்

image

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே.13இல் தீர்ப்பளிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் உள்பட 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி அறிக்கை வெளியிட்டார். அதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News April 28, 2025

கோவையில் பாலியல் தொழில்: 2 பேர் கைது 

image

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு வீட்டில், இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டினை வாடகைக்கு எடுத்து, மகேஸ்வரன் என்பவர் பாலியல் தொழில் செய்து வந்தது தெரிந்தது. பின்னர் அவரையும், அவருடன் இருந்த 38 வயது பெண்ணையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!