News March 28, 2024
தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றும்

இல்லை தமிழில் நெல்லை பார்லிமென்ட் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (மார்ச் 27) பேசினார். அப்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியை இபிஎஸ் சிறப்பாக வழி நடத்துகிறார். நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற வகையில் ஜூன் 4-ஆம் தேதி 40 இடங்களையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என கூறினார்.
Similar News
News October 23, 2025
நெல்லை: டூவிலர் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். தனது மனைவியுடன் புலவன் குடியிருப்பில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது நண்பருடன் இடையன்குளம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பத்தமடை வடிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் மோதியதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 23, 2025
திருநெல்வேலி மாவட்டத்தில் பொழிந்த மழையளவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பொலிந்த மழை அளவு அம்பாசமுத்திரம்- சேரன்மகாதேவி 7.40, மணிமுத்தாறு 0.80, நாங்குநேரி 5.00, பாளையங்கோட்டை- ராதாபுரம் 7.00, பாபநாசம் 4.00, திருநெல்வேலி 2.00, சேர்வலாறு அணை1.00, கனடியன் அணைக்கட்டு – களக்காடு 2.60, கொடுமுடியாறு அணை 9.00, மூலக்கரைப்பட்டி 1.00, நம்பியார் அணை 3.00, மாஞ்சோலை 4.00, காக்காச்சி 46.00, நாள் மூக்கு 52.00, உத்து 66.00 ஆகிய அளவுகளில் பதிவாகியுள்ளது.
News October 23, 2025
நெல்லை: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை.,

நெல்லை மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <