News January 11, 2025
தமிழகத்திற்கு கடத்த முயன்ற 2,388 மது பாட்டில்கள் பறிமுதல்

உருளையன்பேட்டை போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பு அருகே சந்தேகத்திடமாக நின்றிருந்த ஸ்கார்பியோ காரை சோதனை செய்தனர். காரில் 80 அட்டை பெட்டிகளில் ரூ. 2.86 லட்சம் மதிப்புள்ள 2,388 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. நாமக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் டிரைவரை போலீசார் நேற்று கைது செய்து, மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 4, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News February 4, 2026
புதுச்சேரி: 10th போதும் – அரசு வேலை

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
புதுச்சேரியில் தரம் குறைந்த மாத்திரைகளுக்கு தடை

புதுச்சேரியில் தரமற்ற இரண்டு வகை மாத்திரைகளை விற்பனை செய்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் திருபுவனைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில், மருந்து தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், புதுச்சேரி கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


