News January 11, 2025
தமிழகத்திற்கு கடத்த முயன்ற 2,388 மது பாட்டில்கள் பறிமுதல்

உருளையன்பேட்டை போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பு அருகே சந்தேகத்திடமாக நின்றிருந்த ஸ்கார்பியோ காரை சோதனை செய்தனர். காரில் 80 அட்டை பெட்டிகளில் ரூ. 2.86 லட்சம் மதிப்புள்ள 2,388 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. நாமக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் டிரைவரை போலீசார் நேற்று கைது செய்து, மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 11, 2025
புதுச்சேரி: அரசு சார்பில் குடியிருப்பு வசதி ஆணை

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை புதுச்சேரி மாநில வீட்டுவசதி அமைச்சர் திருமுருகன் மற்றும் அமைச்சர் ஜான்குமார் ஆகியோரின் முன்னிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
News September 10, 2025
புதுச்சேரி: வங்கி பணம் காணாமல் போகிறதா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <
News September 10, 2025
புதுவையில் குடிநீரை வைத்து அரசியல் நாடகம் !

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். புதுவையில் சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இது மிகவும் வருத்தமளிக்க கூடியது. இதை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஆளுநர் , முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.