News November 22, 2025
தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன்(92) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஈரோடு சென்னிமலையில் பிறந்த அவர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள அவர், தமிழில் எண்ணற்ற கவிதை தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். RIP
Similar News
News January 27, 2026
சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சரின் மனு தள்ளுபடி

2006 – 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வருமானத்துக்கு அதிகமாக ₹2.35 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. இதனிடையே, ED-யும் விசாரணை நடத்தி, இதுதொடர்பாக விளக்கமளிக்க ஐ.பெரியசாமி & அவரது குடும்பத்தாருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை SC தள்ளுபடி செய்துள்ளது.
News January 27, 2026
ஜன நாயகன் உடனடி ரிலீஸ்.. கடைசி வாய்ப்பு

‘ஜன நாயகன்’ வழக்கில் இன்று <<18972029>>ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பால்<<>> பட ரிலீஸ் மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், KVN நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, CBFC-ஐ நாடினால் உடனடியாக தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். CBFC பரிந்துரைத்த 14 CUT-ஐ செய்துவிட்டு மீண்டும் சமர்ப்பித்து கோரிக்கையாக வைத்தால் உடனடி தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
News January 27, 2026
மோடியின் பதிவை சர்ச்சையாக மாற்றிய Grok

மாலத்தீவு குறித்த PM மோடியின் பதிவை Grok AI தவறாக மொழிபெயர்த்ததால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு, மோடி அவர்களது மொழியிலேயே X-ல் நன்றி தெரிவித்திருந்தார். அதில் இரு நாடுகளின் நன்மைக்காக இணைந்து செயல்படுவோம் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதை இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு செயல்படுவதாக Grok மொழிபெயர்த்துள்ளது.


