News February 17, 2025
தமிழகஅரசுக்கு பாலபிரஜாபதி அடிகளார் வேண்டுகோள்

அய்யா வைகுண்ட சுவாமியின் 193 வது அவதார தின விழாவுக்கு தமிழகம் முழுவதும் 4 மார்ச் 2025 அன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்க குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அய்யாவைகுண்ட சாமி அவதாரவிழாக்காக கன்னியாகுமரி, நெல்லை, துத்துகுடி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் தமிழக அரசின் வரையருக்கபட்ட விடுமுறையும் அனுமதிக்கபட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
கைவினை தொழிலாளர்களுக்கு மானியத்துடன் ரூ.3 லட்சம் கடன்

குமரி மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்குவது தொடர்பாக வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் ஆணையர் நிர்மல் ராஜ் பேசும் போது கைவினை தொழிலாளர்களுக்கு மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்படுகிறது என்றார். இதில் அதிகபட்சம் ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படும் என்றார்.
News July 6, 2025
பி.எஸ்.என்.எல் தரை வழி மறு இணைப்பு மேளா

பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்பு பெற்று பணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு மறு இணைப்பு வழங்குவதற்கான மேளா ஜூலை.9 அன்று நாகர்கோவில் கோர்ட் ரோடு பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் பாக்கியை தள்ளுபடியுடன் செலுத்தி மறு இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News July 6, 2025
நாகர்கோவில் எம்எல்ஏ கோரிக்கை நிறைவேறியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் “மினி டைடல் பார்க்” அமைப்பதற்காக
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் MR காந்தி தமிழக சட்டமன்றத்தில்
21-03-2025 அன்று கோரிக்கை வைத்தார். அதை தமிழக அரசு பரிசீலனை செய்து அதற்கான ஒப்புதல்களை இன்று வழங்கி இருக்கிறது. இதைஅடுத்து எம்.ஆர்.காந்திக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.