News April 29, 2024

தபால் வாக்குகள் எண்ணும் அறை- ஆட்சியர் ஆய்வு

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 ம்தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார் உடன் இருந்தார்.

Similar News

News November 6, 2025

அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது

image

அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக இருப்பவர்களிடம் இரவு நேரங்களில் செல்போன் திருடு போனது .இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது. இந்நிலையில் நேற்று இரவு நோயாளி ஒருவரிடம் செல்போன் திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார். இன்று நவம்பர் 5ம் தேதி டவுன் போலீசார் விசாரித்து வழக்குப்பதிந்து ஆத்தூரை சேர்ந்த மாரியப்பன் 45 என்பவரை கைது செய்தனர்.

News November 6, 2025

தண்டவாளத்தை கடக்கும் முயன்றவர் ரயில் மோதி பலி

image

அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என விசாரித்து வருகிறார்

News November 6, 2025

தீவிர திருத்த கணக்கு சீட்டு வழங்கிய ஆட்சியர் சந்திரகலா

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின்படி, இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சந்திரகலா இன்று (நவ.5) ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு நகராட்சி தனியார் மஹால் தெருவில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதை பார்வையிட்டார்கள். உடன் வட்டாட்சியர் மகாலட்சுமி, ஆணையாளர் சுரேஷ் குமார் இருந்தனர்.

error: Content is protected !!