News February 18, 2025

தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தினர் 59 பேர் கைது

image

யூ.ஜி.சி. வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி பழைய பாதாள காளியம்மன் கோயில் அருகே இருந்து ஊர்வலமாக மாணவர் சங்கத்தினர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2025

இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

image

தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்தில் வருகின்ற 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்ன்னிட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்ய https://thanjavur.nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 10 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News April 19, 2025

தஞ்சாவூர்: கோடை விடுமுறைக்கு ஏற்ற இடம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுப்பட்டினம் கிராமம் உள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதி கடந்த சில மாதங்களாக பிரபலமடைந்து வருகிறது. அமைதியான சூழலில் தென்னந்தோப்புகள். மனம் வருடும் தென்றல், 2 கிமீ தொலைவிற்கு வெண்ணிற மலர் பரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகளென அனைவரையும் இந்த கடற்கரை தொடர்ந்து வசீகரித்து வருகிறது. இந்த கோடையில் குடும்பம் நற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட இதை விட நல்ல இடம் கிடைக்குமா? SHARE IT.

News April 19, 2025

தனியார் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

தஞ்சை அருகே திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

error: Content is protected !!