News August 15, 2024
தபால் நிலையங்களில் 4052 தேசியக்கொடிகள் விற்பனை

பாரத தேசத்தின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விறுவிறுப்பாக கடந்த 10 நாட்களாக நடந்தது. இந்த ஆண்டு நேரில் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலங்கங்கள் மூலம் 4052 தேசிய கொடிகள் விற்பனையானதாக குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
Similar News
News September 18, 2025
குமரி மாவட்ட எஸ்பி பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வாகன சோதனையின் போது 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் ஓட்டி வந்த ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டது. அந்த இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோர்களின் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
குமரி: EXAM இல்லா அரசு வேலை – APPLY….!

குமரி மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே <
News September 18, 2025
குமரி: காதலிக்காக மூதாட்டியிடம் நகை பறிப்பு

பள்ளியாடி ஜெபனேசரின் தாயார் ரெஜி(63) 2 நாட்களுக்கு முன்பு கழிவறையில் மயங்கி விழுந்தார். அவரது கழுத்திலிருந்த 11 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. தக்கலை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருவட்டாரை சேர்ந்த ஆனந்த்(26) என்பவரை உண்ணாமலைக்கடையில் நேற்று கைது செய்தனர். இஞ்சினியரான ஆனந்த் வேலை கிடைக்காததால் பெயிண்டிங் வேலை பார்த்ததாகவும்,காதலிக்காக நகை பறித்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார்.