News April 16, 2025

தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

image

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.

Similar News

News December 25, 2025

குமரி: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE..!

image

குமரி மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு<> க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

News December 25, 2025

குமர்: தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு!

image

பள்ளியாடி சேரிக்கடை செல்லத்துரையின் மனைவி சொர்ணம் (75). சற்று மனநலம் பாதித்த இவர் கடந்த டிச.18.ம் தேதி விறகு அடுப்பில் தீ மூட்டிய போது எதிர்பாராதவிதமாக தீ சேலையில் பிடித்து, தீ உடல் முழுவதும் பரவி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கைப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.24) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News December 25, 2025

ரெயில் மீது கல்வீசிய சிறுவன் கைது

image

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

error: Content is protected !!