News November 17, 2024

தன்னார்வ அமைப்பு சார்பில் 5,000 பனை விதைகள் நடவு

image

விதைகள் சுற்றுசூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 3 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 4ஆவது ஆண்டில் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திருமுக்கூடல் செய்யாற்றங்கரையோரம், நேற்று (நவ.16) 5,000 பனை விதைகள் நடவு செய்து, 4ஆம் ஆண்டுக்கான நிறைவு விழா நடைபெற்றது.

Similar News

News March 1, 2026

காஞ்சிபுரம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

உத்திரமேரூரில் போட்டியிட எம்.எல்.ஏ சுந்தர் மனு

image

தமிழகம் முழுவதும் ஓரிரு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது . இந்நிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து விருப்பமனுக்கள பெறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு தற்போது எம்எல்ஏ ஆக உள்ள சுந்தர், மீண்டும் போட்டியிட திமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களோடு சென்று விருப்பமான தாக்கல் செய்துள்ளார்.

News March 1, 2026

காஞ்சிபுரத்தில் மனைவியை தாக்கியவர் கைது!

image

சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி(45). ஆட்டோ டிரைவரான இவருடைய மனைவி சுகந்தி(38). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியை கத்தியால் வெட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, வெளியே வந்த பழனி, மீண்டும் மனைவி மீது சந்தேகப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில், பழனியை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!