News May 23, 2024

தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, தனுஷ்கோடி சுற்றுலாத் தலத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகைதந்து கடலின் அழகை ரசித்துச் செல்வர். இந்நிலையில் நள்ளிரவு முதல் பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமும் அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி இன்று சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 8, 2025

ராமநாதபுரம் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.
இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

பரமக்குடி அருகே சாலை விபத்தில் மனைவி பலி

image

பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்துரைச் சேர்ந்த தம்பதி மதன் – சங்கீதா இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் மதுரையில் நேற்று இரவு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் பரமக்குடிக்கு டூவீலரில் வந்த போது கமுதக்குடியில் கால்வாய் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News September 8, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையம்

image

தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட அளவில், சிறந்த காவல் நிலையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும், முதலமைச்சரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலையம், 2023 ஆம் ஆண்டிற்கான, சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதலமைச்சரின் கேடயம் பெற்றது. கேடயத்தை கமுதி, சார்புஆய்வாளர் சக்திகணேஷ், பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!