News February 10, 2025
தனியார் பேருந்து விபத்து: ரூ.3லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களை நேற்று நேரில் சந்தித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
Similar News
News March 3, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.2) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News March 3, 2026
திருப்பூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.02) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 3, 2026
போதை பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிஷ் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலால்துறை உதவி ஆணையர் செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது


