News December 6, 2025
தனியார் பேருந்து மோதி வடமாநில தொழிலாளி பலி

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிரமன் அலி தூத்துக்குடியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்தையாபுரம் அருகே பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்த நிலையில் முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
தூத்துக்குடி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

தூத்துக்குடி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <
News December 6, 2025
தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 6, 2025
தூத்துக்குடி: பேருந்து சக்கரத்தில் சிக்கி போட்டோகிராபர் பலி

முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(36), போட்டோகிராபர். இவர் நேற்று தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள டைடல் பார்க் அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்த போது, அங்கு இருந்த பேரிக்கார்டு மீது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதி அதன் சக்கரத்தில் சிக்கி ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


