News March 11, 2025

தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் பலி

image

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கீழபஞ்சபூரைச் சேர்ந்தவர் சரண் (20). இவர் தனது நண்பர் அபர்நாத் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு குளித்தலை அருகே மருதூர் பிரிவு சாலையில் வந்துள்ளார். அப்போது எதிரே தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சரண் பலியானார். அபர்நாத் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 14, 2025

கரூர்: மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு!

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின், மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர், 2,513 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான இணையவழி இலவச பயிற்சி வகுப்பு வரும், 20 தேதி முதல் நடத்தப்படவுள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனடியாக நேரடியாகவோ அல்லது 04324- 223555, 63830-50010 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவோ பதிவு செய்யலாம், என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்!

image

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.ஜோஷ் தங்கையா தலைமையில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 41 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News August 14, 2025

கரூர்: ரூ.40,000 சம்பளத்தில் உடனே வேலை..APPLY NOW

image

கரூர் மக்களே, Hindustan Petroleum Corporation Limited காலியாக உள்ள FTPA பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் வரும் செப்.14 தேதி வரை, இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!