News February 18, 2025
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வரும் 21ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 300க்கும் மேற்பட்டோரை தோ்வு செய்ய உள்ளனா். 10, +2, பட்டப் படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News March 3, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News March 3, 2026
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் பெற்ற ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரதாப் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை இன்று (மார்ச்.2) மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
News March 2, 2026
தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பன்டூர் அடுத்த மணவாளநகர் கே.இ.என்.சி நடேசன் செட்டியார் பள்ளியில் இன்று (மார்ச்.02) பொது தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தினை ஆட்சியர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளவர்.


