News May 7, 2024

தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பணம் கொள்ளை

image

தர்மபுரி அருகே மொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சாந்தி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கழிவறை செல்வதற்காக வெளியே வந்தபோது 2 நபர்கள் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து 47 ஆயிரம் பணம் மற்றும் சாந்தியின் கழுத்திலிருந்த 7.5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர் . இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார்
விசாரிக்கின்றனர்.

Similar News

News December 27, 2025

தீர்த்தமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட MLA!

image

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு பெயர் சேர்த்தல், நீக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (டிச.27) அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தீர்த்தமலையில், அரூர் MLA வே.சம்பத்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் அம்மன் ரவி, ராம்கி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். பின், மக்கள் நிரப்பும் படிவங்களை மேற்பார்வையிட்டார்.

News December 27, 2025

தருமபுரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

தருமபுரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!