News February 3, 2026
தனிக்கட்சி தொடங்குகிறாரா சசிகலா?

வருகிற சட்டமன்றத்தேர்தலில் தனது தலைமையில் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார். மேலும், அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார். எதிரிகளையும், துரோகிகளையும் நிச்சயம் தோற்கடிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் சசிகலா தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News February 5, 2026
ஒரே சட்டமன்ற தொகுதியில் அதிகமுறை வென்றவர்கள் யார்?

அரசியலில் கால்பதித்து ஒரு தேர்தலில் வெற்றி பெறுவது என்பதே பெரிய விசயம். ஆனால் ஒரே தொகுதியில் அதிகமுறை வெல்வது என்பது சாதாரண விஷயமில்லை. அதற்கு தொகுதி மக்களின் அபரிமிதமான நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெறவேண்டும். அந்த வகையில் தற்போதைய TN அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியில் அதிக முறை வென்றவர்கள் யார் என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம். இவர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார் என்பதை சொல்லுங்க!
News February 5, 2026
திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி விலகலா?

திமுக கூட்டணியிலிருந்து யாரையும் விடுவதாக இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ளவர்கள் வேறு எங்கு சென்றாலும் அவர்களுக்கு எந்த சீட்டும் கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவது பற்றி தலைமையே முடிவெடுக்கும் என்றார். திமுக கூட்டணியிலிருந்து காங்., வெளியேறவுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
News February 5, 2026
PM மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி: ஓம் பிர்லா

PM மோடியை பார்லிமெண்ட்டுக்கு வரவேண்டாம் என்று தான்தான் சொன்னேன் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். PM மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்திருப்பதால் அப்படி சொன்னதாக அவர் கூறியுள்ளார். சீன ஆக்கிரமிப்பு, அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல பயந்து PM மோடி அவைக்கு வரவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


