News May 26, 2024
தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு பதிவு

திருச்சுழி அருகே பூவாகனி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பையா(81). முதியவர் சின்ன கருப்பையாவுக்கும் அவரது மகன் பாலகுருவுக்கும் இடையே சொத்து பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் சின்ன கருப்பையாவை பாலகுரு உள்ளிட்ட இருவர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நரிக்குடி போலீசார் நேற்று மே 25 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 13, 2025
விருதுநகர்: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <
News October 13, 2025
ராஜபாளையத்தில் கடித்து குதறிய கரடி

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்த முத்து(45) ராஜபாளையத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள நிலாப் பாறை காட்டுப்பகுதியில் காவலர்களுடன் ரோந்து சென்ற போது கரடி ஒன்று இவரை தாக்கி தொடைப்பகுதியில் கடித்து குதறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கரடியை விரட்டிய நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News October 13, 2025
விருதுநகரில் ஒரு வாரத்தில் அகற்ற கெடு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்கம்பங்கள், மின் வாரியத்திற்கு சொந்தமான உடைமைகள் மீது கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர தட்டிகளால் ஊழியர்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு வாரத்திற்குள் இவை அனைத்தையும் அகற்ற வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.