News April 23, 2025

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்

image

புளியந்தோப்பைச் சேர்ந்த பாலு, குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர். நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) குடித்துவிட்டு ரகளை செய்ததோடு, மனைவி வள்ளி மற்றும் மருமகள் அஞ்சலையை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தையை ஹெல்மட்டால் அடித்து, பிறகு கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆனால், தந்தையே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

Similar News

News April 23, 2025

அங்கன்வாடி வேலை: இன்றே கடைசி நாள்

image

சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இன்றைக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

விமான நிலையத்தில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

சென்னை விமான நிலையத்தில், ஏ.டி.சி. எனப்படும் விமான போக்குவரத்து தகவல் கட்டுப்பாட்டு கோபுரம் செயல்படுகிறது. இங்கு, காலியாக உள்ள ஏ.டி.சி., இளநிலை அதிகாரிகளுக்கான 309 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. வயது 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதிதான் கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.aai.aero இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (22.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*.

error: Content is protected !!