News November 3, 2024
தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் மகன் தற்கொலை!

புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து என்பவரின் மகன் பாக்கியராஜ் (29). இவருக்கும்
இவரது தந்தைக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாக்கியராஜ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் சிங்காரவேலு கொடுத்த புகாரின் பேரில் உடையாளிப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராசு விசாரணை நடத்தி வருகிறார்.
Similar News
News August 24, 2025
புதுக்கோட்டை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுகை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!
News August 24, 2025
புதுக்கோட்டையில் இவ்வளவு பழமையான இடங்களா?

புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பழமையான வரலாறுகளை கொண்டுள்ளது.
குடுமியான்மலை கல்வெட்டு – 2300 ஆண்டுகள் பழமை
குன்றாண்டார் கோயில் – 1200 ஆண்டுகள் பழமை
கொடும்பாளூர் மூவர் கோயில் – 1000 ஆண்டுகள்
நார்த்தாமலை, விஜயாலய சோழீஸ்வரம் – 1100 ஆண்டுகள் பழமை
திருமயம் கோட்டை – 400 ஆண்டுகள் பழமை
மலையடிப்பட்டி – 300 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News August 24, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.