News March 24, 2025

தண்ணி லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் கவனத்திற்கு

image

கோவையில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொடுக்க, மேல்நிலைத்தொட்டிகள் கட்டி, 24 மணி நேரமும் அரசு அனுமதிக்கும் கட்டணத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து தண்ணீர் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் தங்களது விபரங்கள் மற்றும் நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் விபரத்தை, cityengineer.coimbatore@gmail.com, Whatsapp No: 99440-64948 வாயிலாக தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

Similar News

News March 26, 2025

கோவை: 3 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

image

காவல் நிலைய பதிவேடுகள் முறையாக பராமரிப்பு, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை, குற்றங்களை கண்டறிதல், தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி தாலுக்கா, மகாலிங்கபுரம் காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 9001 : 2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கியூசிஐ விருதையும் பெற்றுள்ளன. இவற்றிற்காக டிஎஸ்பி, போலீசார் உள்ளிட்டோரை எஸ்பி கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

News March 26, 2025

கோவை மாநகராட்சியில் நீர் தேவைக்காக புதிய திட்டம் 

image

தொழிற்சாலை மற்றும் கட்டுமான தேவைகளுக்கு, கோவை மாநகராட்சி சார்பில், மும்முறை சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதுபோன்று நீர் விநியோகம் செய்யும் சேவைகளில் ஈடுபடுபவர்கள், தங்கள் விவரங்களை cityengineer.coimbatore@gmail.com என்ற இமெயில் முகவரி மூலமாகவோ, அல்லது 9944064948 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அனுப்பலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!