News November 6, 2025
தண்டவாளத்தை கடக்கும் முயன்றவர் ரயில் மோதி பலி

அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என விசாரித்து வருகிறார்
Similar News
News February 7, 2026
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ட்ரோன் பறக்கத் தடை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 07.02.2026 மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி, வரும் 09.02.2026 அன்று சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் பிற மனிதர் இல்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
News February 7, 2026
ராணிப்பேட்டை: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 7, 2026
ராணிப்பேட்டை: CERTIFICATES வாங்க HI போடுங்க!

ராணிப்பேட்டை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


