News April 15, 2025
தண்டவாளத்தில் உடற்பயிற்சி இரும்பு மனிதன் கைது

நாகர்கோவில் அருகே தாமரைக் குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் இரும்பு மனிதன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தனது நண்பருடன் உடற்பயிற்சி மேற்கொண்ட சமூக வலைதளங்களில் இது பரவியது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று (ஏப்.15) கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Similar News
News January 26, 2026
குமரி: அரசு பேருந்து ஏறியதில் ஒருவர் பலி

நாகர்கோவிலில் அருகே கட்டையன் விளையை சேர்ந்தவர் அசாரி (65). இவர் கட்டையன் விளையில் ரோட்டை கடக்கும் போது அந்த வழியாகச் சென்ற பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அசாரி கீழே விழுந்த நிலையில் அந்த வழியாகச் சென்ற அரசு பஸ் அவர் மீது ஏறியதில் படுகாயமடைந்த அசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 26, 2026
குமரி: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

குமரி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1.<
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 26, 2026
குமரியில் திருமணம் நிறுத்தம்; G Pay மூலம் பணம் பறிப்பு

கொட்டாரத்தைச் சேர்ந்த தனேஷுக்கும், தனிஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தனிஷா ரூ.35,000 கொடுத்து செல்போன் வாங்கி தர தனேஷிடம் கேட்டதால் தனேஷ் செல்போன் வாங்கி கொடுத்தார். ஆனால் திருமணம் நின்றுவிட்டது. தனிஷா தான் கொடுத்த பணத்தை தனேஷிடம் திரும்ப கேட்ட நிலையில் தனேஷை சிலர் சேர்ந்து தாக்கி அவரது ஜிப்பே மூலம் ரூ.40,000 தனிஷாவுக்கு அனுப்பிய நிலையில் இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிந்துள்ளனர்.


