News July 24, 2024

தணிக்கையாளர்கள்  விண்ணப்பிக்க அழைப்பு

image

கரூர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புசங்கங்கள், ஊராட்சி அளவிலான குழுகூட்டமைப்புகள் , வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான பட்டய கணக்காளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04324-257377, 9442563538 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

Similar News

News March 5, 2026

அரவக்குறிச்சி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி!

image

அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56). இவர் தனது மகள் திவ்யபாரதி (29) உடன் மலைக்கோவிலுார் பாலம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இதே திசையில் நவீன் குமார் (26), என்பவர் வேகமாக ஒட்டி வந்த டூவீலர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் கரூர் GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

கரூர்: பெண் விபரீத முடிவு!

image

தோகைமலை அருகே உள்ள கொசூர் ஒட்டப்பட் டியை சேர்ந்த பெத்தாயி (50). கணவரை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வந்தநிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகன் இறந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பெத்தாயி அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். உறவினர்கள் பெத்தாயியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச் 4) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!