News January 24, 2025
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நான்கு பேர் கைது.

பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த மூன்று கடைகளில் இருந்து 75 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். போதை விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்து , அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
Similar News
News November 3, 2025
தஞ்சை: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணிமண்டபம், மதுக்கூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை (4/11/2025) காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே போல் நாளை மறுநாள் (5/11/2025) ஒக்கநாடு கீழையூர், மாரியம்மன் கோயில், வீரமரசன்பேட்டை துணைமின் நிலையத்திலும் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
தஞ்சை: பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

திருவோணம் அருகே அனந்தகோபாலபுரத்தைச் சேர்ந்த முகமது கனி மனைவி பைரோஸ்பேகம் (40), வெள்ளிக்கிழமை இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை நோக்கிச் சென்றபோது, நம்பிவயல் கடைவீதி வேகத்தடையில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


