News July 22, 2024
தடகள வீரர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு

புதுச்சேரி மாநிலத்தில், விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது பயிற்சியாளர்களில், 28 பேரை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனையர், 100க்கும் மேற்பட்டோர் நேற்று முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பயிற்சியாளர்களுக்கு பணி நிரந்தரம் தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர்.
Similar News
News August 13, 2025
புதுவையுடன் இந்த பகுதி இணைந்தது எப்படி?

காரைக்கால், மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். பிரெஞ்ச் கவர்னராக இருந்த தூப்ளே, இதனைச் சுற்றியுள்ள ஊர்களை விலைக்கு வாங்கி விரிவாக்கம் செய்தார். இதற்கு முக்கிய காரணம் பிரஞ்ச் அரசில் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார். இவருடைய புத்திக்கூர்மையால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.
News August 13, 2025
புதுச்சேரி மக்களே இந்த நம்பரை SAVE பண்ணுங்க!

புதுச்சேரியில் மருத்துவ தேவைகளுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம். ▶️ புதுச்சேரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை – 0413-2274552, ▶️ காரைக்கால் பொது மருத்துவமனை – 04368-222450, ▶️ மருத்துவ அலுவலர் 04368-222593, ▶️ பொது மருத்துவமனை – மகப்பேறு-04368-223917. அவசர உதவிக்கு மட்டும் அழைத்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க
News August 13, 2025
புதுவையில் சோலார் விழிப்புணர்வு முகாம்

புதுவை தவளக்குப்பம் சுபமங்கள ஹாலில் நாளை (ஆக.14) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இத்திட்டம் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க 1 கிலோ வாட்ஸ்க்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்ஸ் ரூ.60 ஆயிரமும் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு 9489080373, 9489080374 தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.