News August 10, 2024
தடகள போட்டிக்கு வீரர்கள் தேர்வு

ஈரோட்டில் செப்.20 முதல் செப்.22 வரை மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.14,16,18,20 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளாக நடக்கும் இப்போட்டிக்கான தேனி மாவட்ட வீரர்கள் தேர்வு ஆக.24 அன்று முத்துதேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் ஆதார், வயதுசான்று நகலுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 9, 2025
தேனி: இந்த தேதிகளில் கனமழை

தேனி மக்களே, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தேனியில் வருகிற 12, 13ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 9, 2025
தேனி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News November 9, 2025
தேனி அருகே கத்தியால் குத்திக் கொலை

வீரபாண்டி பகுதியை சோ்ந்தவா் விக்னேஷ் (25). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று (நவ.8) தனது வீட்டில் அதே பகுதியை சோ்ந்த நண்பா்களான யுவராஜா, அபிஷேக் ஆகியோருடன் சோ்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் யுவராஜா, விக்னேஷை கத்தியால் குத்தியுள்ளார். இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வீரபாண்டி போலீசார் யுவராஜா, அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர்.


